கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Mittwoch, 5. Februar 2014

சிக்கன் மஞ்சூரியன்.

தேவையான பொருட்கள்

கோழி எலும்பில்லாமல் - அரை கிலோ
கோதுமை (மைதா)மா - 100 கிராம்
சோளமா (கார்ன் ஃப்ளார்) - 50 கிராம்
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
முட்டை - ஒன்று
மிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி

 மஞ்சூரியன் தயாரிக்க

 வெங்காயம் - 50 கிராம்
 பச்சைமிளகாய் - 10
உள்ளி (பூண்டு) - 10 பல்
 குடை மிளகாய் - 1
 சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
 வினிகர் - அரை தேக்கரண்டி
 அஜினமோட்டோ - அரை தேக்கரண்டி
 சோள மாவு - 1தேக்கரண்டி
 உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு   

செய்முறை

ஓரு பாத்திரத்தில் கோதுமை 
(மைதா)மா , சோளமா உப்பு, 
சோடா உப்பு ஆகியவற்றுடன் 
முட்டையை அடித்துஊற்றி 
மிளகுத்தூள் சேர்த்து, சிறிது
தண்ணீர் விட்டு கரைத்து 
வைக்கவும்.

நீளமாகவும், சிறுதுண்டாகவும் நறுக்கிய
கோழியை ஒவ்வொன்றாக முக்கி, ஒரு
கடாயில் எண்ணெய்யை காயவைத்து
போட்டு பொரித்து எடுக்கவும்

வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு
இவை மூன்றையும் பொடியாக நறுக்கவும்

ஒரு தாட்சியில்  எண்ணெய் விட்டு சூடாக்கி 
அதில் நறுக்கியகுடைமிளகாய், சோயா சாஸ், 
வினிகர், அஜினமோட்டோ, உப்பு சேர்த்து 
கிளறவும் 

அதன் பின்னர் சோளமாவை 1/2 கிளாஸ் 
தண்ணீரில் கரைத்துகிளறியவற்றுடன் ஊற்றி 
கொதிக்கவிடவும் 

கொதித்துவற்றியவுடன் பொரித்த சிக்கனை 
போட்டுகிளறி இறக்கவும்..

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.