கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Freitag, 30. März 2012

உள்ளி (பூண்டு) சாதம்

தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி - 2 கப்
பூண்டு (உள்ளி) - 20 பெரியபல் 
தேங்காய்ப்பால் -2 கப்
தண்ணீர் -2 கப்
வெங்காயம் - 2
பொரித்த வெங்காயம் - விரும்பினாள்
பச்சைமிளகாய் - 2
நெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையானளவு
இஞ்சி,பூண்டு விழுது - 3 ஸ்பூன்
 முழு மிளகு -10
உப்பு -தேவையானளவு
முந்திரி (கயூ)-10 துண்டு
ஏலக்காய் -2
கிராம்பு -3
கறுவாப்பட்டை -1 துண்டு

செய்முறை
வாணலியில் நெய் மற்றும் சிறிதளவு
எண்ணெய் ஊற்றி பட்டை,ஏலக்காய்,
கிராம்பு,முந்திரி,பச்சைமிளகாய் ஆகிய
வற்றினை போட்டு
 முறுக விடவும்.

பின் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம்
மிளகுஆகியவற்றினை போட்டு 
வதக்கவும்.

நன்கு வதங்கிய பின் பூண்டு(உள்ளி)களை 
போடவும்.

இஞ்சி,பூண்டு (உள்ளி) விழுது சேர்த்து 
கிளறவும்.

எண்ணெய் பிரிந்து வரும் பொழுது தேங்காய்
பால், தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 பின்பு அரிசி.உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் சற்று வற்றியதும் தீயை மிதமாக
வைத்து பாத்திரத்தின் கீழே தோசைகல்லும்
மூடியின் மேல் கனமான பொருள் அல்லது
 பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தம்மில்
போடவும்.

15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.

பறிமாறும் போது பொரித்த வெங்காயத்தை
மேலே தூவி பறிமாறலாம்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.