கலைக்கழகம்-சமையல்
தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

Samstag, 4. August 2012

அரிசிபருப்பு சாதம்

தேவையான பொருட்கள்
 புழுங்கல் அரிசி - 1 கப் 
 துவரம்பருப்பு - 3/4 கப் 
 சின்ன வெங்காயம் - 10 
 பச்சை மிளகாய் - 2 
 வர மிளகாய் - 2 
 உள்ளி (பூண்டு )- 5 பற்கள் 
 நறுக்கிய தேங்காய் பற்கள் - 1/2 கப் 
 மிளகாய்தூள் -  1/2 தேக்கரண்டி 
 மஞ்சள்தூள் -  1/2 தேக்கரண்டி 
 தக்காளிப்பழம்- 2 
 கத்திரிக்காய் - 1
 உருளைக்கிழங்கு - 1

தாளிக்க தேவையானவை 
உளுத்தம் பருப்பு,   1/2 தேக்கரண்டி 
கடலைப்பருப்பு -  1/2  தேக்கரண்டி 
 கடுகு, -  1/4தேக்கரண்டி 

அரைக்க தேவையானவை
 மிளகு - 1/2 தேக்கரண்டி 
 சின்ன சீரகம் -  1/2 தேக்கரண்டி 
 பெருஞ்சீரகம் (சோம்பு) -  1/2 தேக்கரண்டி 

செய்முறை

சின்ன வெங்காயம், உள்ளி (பூண்டு ), தக்காளி ஆகியவற்றை வெட்டவும் 

வெட்டியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும் .

அதன் பின்னர் பச்சைமிளகாய், வரமிளகாயை ஆகியவற்றை கீறி இன்னொரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். 

வைத்த பின்னர் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடி பொடியாக வெட்டவும்.

வெட்டிய கத்தரிக்காய்,உருளைக்கிழங்கினை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.

பின்னர் மிக்ஸியில் மிளகு , சின்னசீரகம் ,பெருஞ்சீரகம் (சோம்பு) ஆகியவற்றை போட்டு அரைக்கவும்.

அரைத்தவற்றை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்

அதன் பின்னர் அடுப்பில் தாட்சியை வைத்தி சூடாக்கவும்.

எண்ணெய் சூடான பின்னர்  கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும் .

 தாளித்த பின்னர் அதனுடன் வரமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், உள்ளி (பூண்டு) தக்காளிப்பழம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 

வதக்கிய பின்னர் அதனுடன் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்

தண்ணீர் சேர்த்த பின்னர் அதனுடன்  மிளகாய்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய் பற்கள், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு  ஆகியவற்றை சேர்க்கவும்.

இவையாவும் சேர்ந்த பின்னர்  ஓரளவு அவிந்ததும்

இவற்றுடன்  புழுங்கல் அரிசி ,துவரம்பருப்பு போட்டு சிறிது நேரம் மூடி விடவும் 

சிறிது நேரத்தின் பின்னர் அவற்றுடன் அரைத்து வைத்திருக்கும் மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றை போட்டு  பாத்திரத்தை மூடி அவிய விடவும் 

இவையாவும் அவிந்த பின்னர் அடுப்பை நிறுத்திவிடவும் 

அடுப்பை நிறுத்தி சரியாக 10 நிமிடம் கழித்ததும் அடுப்பில் இருந்து இவையாவும் போடப்பட்ட பாத்திரத்தை இறக்கி விடவும்.

இப்போது சுத்தமான சுவையான சத்தான அரிசிபருப்புசாதம் 
தயாராகிவிட்டது

அதன் பின்னர் ஒரு தட்டில் சுத்தமான சுவையான சத்தான அரிசிபருப்பு சாதத்தை வைத்து அதனுடன் அப்பளம் ,பொரித்த உப்பு மிளகாய் வத்தல் , கீரை சம்பல் அல்லது தூதுவளை சம்பல் ஆகியவற்றை வைத்து பறிமாறவும் 

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.